Sunday, April 22, 2012

நந்தீஸ்வருடு ( Nandeeswarudu)- தெலுங்கு படம்…


நந்தீஸ்வருடு ( Nandeeswarudu)- தெலுங்கு படம்…



Cast: Taraka ratna,  Rachana , Sheena Shahabadi , Jagapathi Babu, Suman, Sivaji Raja,Seetha, Ajay , Nagineedu, Benarjee, Rajiv Kanakala, Delhi Rajeshwari
Music : Parthasaradhi
Editor : K V Krishna Reddy
Story : Chinni Krishna
Screenplay :Anji Sreenu
Photography : Sudhakar Reddy
Direction : Sreenu Yarajala / Anji Srinu
Producer : Kota Gangadhar Reddy, Segu Ramesh Babu
Banner : SRB Art Productions
படம் ஆரம்பிக்குது….. டம் டம் டுமில், ஹே ஆய் ஊய் சம்பேஸ்தானு. வெயிட் வெயிட் மக்கா ஒன்னும் இல்ல இந்த ரவுடிங்க எப்பவுமே இப்படித்தான்…
அமைதி அமைதி….
மந்திரி டென்சனா இருக்காரு, போலிசூ பெரிய ஆபிசர( ஏட்டு இல்லைங்க வேற) பார்த்து,
ஏன்யா அந்த நந்துவ (நந்திஸ்வருடு) அடக்க முடியாதா அவனோட ஆட்டம் அதிகமா இருக்கேன்னு சவுண்டு உடறாரு(சவுண்டு உட்டாதான் தெலுகு படம்). அந்த போலீசு சொல்றாரு அய்யா அவன அடக்கனும்னா ஒரு டைனமைட் நோ நோ டைனமிக் ஆபிசரலாதான் முடிம்னு சொல்றாரு. அப்படின்னா என்னான்னு கேட்குது மந்திரி குருப்பு மந்திரி இங்கீபீசுல வீக்). அந்த டைனமிக்தான் ஜகபதி பாபு………..இவரு சாக்லேட்ட டீயில நனைச்சு சாப்புடற பயங்கரமான போலிச்சு. ஏற்கனவே ஒரு புள்ளதாச்சிய தீவிரவாதிங்க்கிட்டயிருந்து காப்பாத்தின மவராசந்தான் ஜகபதி. மந்திரி அவர நம்பி ஆந்திராவையே ஒப்படைகிறாரு டொட்டொடங்…
இனி யாரந்த நந்திஸ்வருடு…….ஹீரோதான்( தரங்க ரத்னா என்.டி.ஆர் பரம்பரை)

ஹீரோன்னா பாவுன்னாத்தானே இருக்கனும் ஆனா.. நமக்கு டவுட்டு வருது..அவரோட ச்டோரி கம்மிங்………………ஹீரோவட அம்மா சீதா, அப்பா சுமன். சீதன்னாலே பாவுன்னா பேமிலிதானே எல்லா படத்துலயும் சோ நல்லவருதான் ஹீரோ.. ஆனா ஏன் மந்திரி அப்டி சொன்னான். யோசிங்க மக்கா.
ஒரு பாவுன்னா (நல்ல) ஃபேமிலிலருந்து I.P.S. ஆகனுங்கற கனவோட படிக்க போறாரு நந்து. அவரோட லவ்வர் ரேடியோ ஜாக்கி. எல்லாம் நல்லா போகும்போது இந்த ரவுடிங்க தான் இடையில இடையில வந்துட்டு நாங்களும் படத்துல இருக்கோம்லங்கிராங்க……. பாபாதான் பெரிய ரவுடி அவனோட ஆளுங்கல்லாம் அப்பிரானிகளை கொல்றாங்க, கிழவிய ரேப் பன்றாங்க ச்டுப்பிடுஸ்..

இந்த பாபாவோட தம்பி, பயபுள்ள சும்மா இல்லாம ஹீரோகிட்ட போயி ஒரண்டை இழுக்குது, அவ்ரு சும்மா உடுவாரா அடிச்சு நாக் அவுட் (நாக்கை கட் பன்றது.) பன்னிடுறாரு. அவ்லோதான், அப்பறம் ஸ்டார்ட் ஆக்சன் கேமரா ரோலிங்தான்……
இதுல இன்னொரு வில்லன் வேற ஹீரோவட அப்பாவோட நெஞ்சுல மிதிச்சு என் பொன்ன ஹீரோக்கு கட்டிவைன்னு மிரட்டர்ரார். ஹீரோ என்ன பன்னுவார் லேசா ஒரு தட்டு தட்டுறார் அந்த வில்லனை, அதுக்கு போயி செயிலுல புடிச்சு போடுறாங்க.. நமக்கே பாவமா இருக்கு பாவம் செயிலுல ரொம்ப கஸ்டபடுறாரு. என்ன பன்றது நம்ம கலிஞர் மாதிரி யாரும் ஆந்திரால இல்ல போல கைதிக்கு கறி சோறு போட்டு காசு கொடுக்க. .

ஆந்திரா காவல்துறைக்கு ஒரு நல்ல போலீசு நட்டம்தான் அப்பறம் எப்புடி ஆந்திரா உருப்புடும்...
அப்பறம் ஹீரோ அவரு அம்மாவ அப்பா கைல ஒப்படச்சிட்டு நல்லப்புள்ளயா வேற வேலை தேடுறாரு. ஆனால் இந்த ரவுடிபயக உடமாட்டேங்கிராங்கலே. கிழவிய ரேப் பன்ற குரூப் ஹீரோவட நன்பன் அம்மாவ மயிர அறுத்து ஹீரோவ ஒரு கொலைகாரனா மாத்திபுடுராங்க (ஒரு கொலை). தென்..
அப்பறம் ஒரு சின்ன பையன் கைய வெட்டிட்டான் இன்னொரு வில்லன் அவனை போட்டு தள்றாரு(ரெண்டாவது கொலை) இனிமே நான் என்ன மாட்டேன் போங்க.. இப்படி ஒருத்தன் கிடைச்ச போதும் இந்த மொக்க மக்கள் ஏத்திவுட்டு ஏத்திவுட்டு பெரிய தாதாவ ஆக்கிடுவாங்க. இடையில ஹீரோயின் ஒன்லி ஃபார் டூயட்.. அப்பறம் ஹீரோயினுக்கு ஃபைட்டா கொடுப்பாங்க..
இந்த நல்லவரத்தான்(நந்திஸ்வரடு) வீனாபோன மந்திரி பேச்சை கேட்டு அடக்க வறார் மிஸ்டர் ஜகபதி. அடக்குனாறா?.
அடக்க வந்த ஜகபதி கம்னு இருக்க, ஹீரோ எல்லா ரவுடியையும் கொன்னு சாவடிக்கிறார். பின்ன ஹீரோவ ஜகபதி கொன்னுடறார்.
இருங்க இருங்க ஹீரோ செத்துட்டா படம் எப்படி ஓடும், ஹீரோ சாவல ஜகபதி சும்மாச்சுக்கும் டிராமா பன்னினாராம்.
பின்ன ஜகபதியும் நந்திஸ்வரடுவும் (நந்து மேல ஒரு FIR ம் இல்ல அதனால போலிசுல சேரலாமாம்) பீகாருக்கு I.P.S ஆபிசரா போராங்க.. அங்க போயி……..அங்க போயி….
 திரும்பவும் முதலருந்து படிங்க….








1 comment:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete