Wednesday, August 8, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 08/08/2012



டெசோ
டெசோ மாநாட்டுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு. தலைவர் கையால இனையதளம் திறந்து வச்சாச்சு. இனையத்தளம் செமையா இருக்குபார்க்குறவங்க பாத்துக்கலாம்…..http://teso.org.in/

டெசோ மாநாடு தமிழ் ஈழத்துக்காக, தமிழ் ஈழத்துக்காக இல்லை, இலங்கை தமிழர் நலனுக்காக, தமிழக மீனவர்களுக்காக, இலங்கை அரசுக்கு எதிராக அல்ல…………இதெல்லாம் தலிவரு சொன்னதுதான்……இன்னும் 4 நாள் இருக்கு, இன்னும் என்னெல்லாம் சொல்ல போறாரோ…….?

என்ன சொல்லுறார் தளபதி?

பரம எதிரிகள்
பரம எதிரிகளான மாயாவதியும், முலாயமும் சோனியா கொடுத்த விருந்துல ஒன்னா கலந்துக்கிட்டு சிறப்பித்திருக்காங்க.

மக்களோட எதிரிகள் எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கய்யா…….

கூடங்குளம்
வர 25 ம் தேதிலிருந்து கூடங்குளம் அனுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கிடுவாங்கலாம்…….கொசு தொல்லை நாராயணசாமி சொல்லிட்டாரு……எந்த 25 ம் தேதின்னும், இதை எத்தனையாவது தடவையா சொல்லுறீங்கன்னும் யாரும் கேக்க கூடாது
ஏன்னா? அது வரும் ஆனா வராது…… 

நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே….
ராகுல் மேல காங்கிரசின் பெரிய தலைங்களுக்கே வர வர நம்பிக்கை குறைஞ்சுக்கிட்டு வருது………அடுத்ததா……..ப்ரியங்காவ களத்துல இறக்க பாக்குதுங்க………..பழம் தின்னு கொட்டை போட்ட பெருசுங்க……..

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தாண்டா
பத்தாயிரம் கோடி செலவு பன்னி செவ்வாய்க்கு ராக்கெட் விடுறான்……வெள்ளைக்காரன்

பத்தாயிரம் கோடி சம்பாதிக்க டாஸ்மாக்குல டார்கெட் வைக்கிறான்....நம்மாளு.

தேசிய விளையாட்டு
ஹாக்கித்தான் நம்ம தேசிய விளையாட்டுன்னு எங்க வாத்தியாங்க எல்லாம் சொல்லி கொடுத்தாங்க……

அதையும் எந்த பக்கி ஆட்டைய போட்டுச்சோ? தேசிய விளையாட்டு எதுன்னு தேடுறானுவலாம்…..

நல்லா தேடி பாருங்கப்பு கிடைக்கலான்னாக்க சுவீஸ் பேங்குல கேட்டு பாருங்க……..

சோனியா கொதிப்பு…
இரண்டாவது தடவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த்து காசு செலவு பன்னித்தான்னு பிஜெபி அத்வானி தப்பா சொல்லிட்டதால சோனியாஜி கொதிச்சு எழுந்துட்டாங்கலாம்………

இவ்வளவு பெரிய தலைவரு தப்பா சொல்லலாமா? அவிங்க முதல் தடவை ஆட்சியை பிடிச்சதே அப்படித்தான்னு கூடவா தெரியாம தப்பு தப்பா சொல்லுவாரு……, பின்ன சம்பாதிக்க (ஊழல் பன்ன) வேண்டிய பணத்துக்கு கணக்கு இடிக்காது?

K.S.K.H.H – ஹிந்தி சினிமா…

வழக்கமா எந்த படமாயிருந்தாலும், அது மொக்கை படமா இருந்தாலும் என்னத்தான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்குறது நம்ம கடமையாச்சேன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்…….

பதிவு எழுத ஆரம்பிச்ச பின்ன பாக்கவே முடியாத ரெண்டாவது படம் இதுதான்……படம் செம கடி…..இதுல டபுள் மீனிங் வசனம் வேற, முடியலை.

கதை சுருக், ரெண்டு இளைஞர்கள் பிரண்ட்ஸ், ரெண்டு பேத்துக்கும் ஆளுக்கு ஒரு பொண்ணு மேல லவ். லவ்வில் எந்த குழப்பமும் பெரிசா இல்லை. ஒரு பொண்ணோட அப்பாவோட செத்து போன அம்மா…….ஒரு ஹீரோ வச்சுருக்கும் பாசமா வளர்க்கும் நாயோட உடம்புக்குள்ள ஆவியா பூந்துருக்கதா எதோ சாமியார் சொல்ல, அதை வச்சு காமெடி பன்றதா நினைச்சு செம கடி கடிச்சுருக்கானுங்க………..


இதுல அனுபம் கெர், நம்ம சாரா ஜேன் (தீராத விளையாட்டு பிள்ளை பட்த்தின் கதாநாயகி வேற இருக்காங்க……., இதுக்கு சன்னி லீயோன் நடிச்சு வெளிவந்துருக்கும் படமே பரவாயில்லை……..

ஈ.மூ….
நம்ம மக்களுக்கு, முக்கியமா படிச்சவங்களுக்கு, மிடில் கிளாஸ் மக்களுக்கு எத்தனை தடவை ஏமாந்தாலும் புத்தியே வரது இல்லை. எல்லாருக்கும் சினிமாவில் வரது மாதிரி ஒரே நாளில் கோடீஸ்வரனாகத்தான் ஆசை.

ரெண்டு ரூவா வாழைப்பழத்தை வக்கைனையா பேரம் பேசி வாங்குமோது இருக்கும் புத்திசாலித்தனமெல்லாம், நடிகர்கள், நடிகைகள் பல்லை காமிச்ச வுடனே வாயையும் சூவையும் மூடிக்கிட்டு வாங்குமோது கானாபோயிடுது…..

சரத்குமார், சத்தியராஜுகளும் இதுக்கெல்லாம் உடந்தையாம், வழக்கும் பாய்ஞ்சிருக்காம், இதே மாதிரி பெப்சி, கோக், பேர் அண்ட் லவ்லி போன்ற குப்பைகளுக்கு மூஞ்சியை காமிக்கும் ஆளுங்க மேலயும் வழக்கு போடனும்…பல்லை காமிச்சு காசு வாங்கிட்டு போகும் பக்கிங்களுக்கு எப்பத்தான் புத்தி வரபோகுதோ? மக்களும் என்னைக்குத்தான் சூதானமா பொழைக்க போறாங்களோ?

அசாம்…
பயங்கர கலவரம்…..70 பேருக்கு மேல கொல்லப்பட்டாச்சு, எல்லாத்தையும் வரைஞ்சு வரைஞ்சு எழுதும், பரபரப்பா நியூஸ் கொடுக்கும் ஊடகங்களும், சால் சாப்பு சொல்லி சமாளிக்கும் மத்திய மாநில அரசுகளும் கலவரத்தின் தொடக்க புள்ளி எதுன்னு சொல்ல மாட்டேங்குறானுங்க…….,

பதவிக்காகவும், பணத்துக்காகவும் ஓட்டு பொறுக்கும் அரசியல்வியாதிங்களின் பேராசைக்கு இன்னும் எத்தனை கலவரம் நடக்க போகுதோ? எத்தனை கொலை விழப்போகுதோ?

14 comments:

  1. பல தகவல்கள்...
    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பல தகவல்களின் தொகுப்பு அருமை! நன்றி!
    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  3. ivan oru kena loosu punda paya, masuraandi, poda poi kaluvi vidura velaiya mattum paarudaanaa ketka maatengran intha pannada.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே...

      Delete
    2. I really appreciate ur patience on any comment.. Because I don't like Ajith and u r writing interviews about him.. One time am also had a comment about (not like this ) ur article.. I feel really sorry that.. If it would be an other man the word would be different from ur way

      Delete
    3. இதைவிட மிகப்பெரிய பாராட்டுக்களையெல்லாம் நான் வாங்கி இருக்கேன் நண்பா.....

      Delete
  4. பல தகவல்கள்... நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. My system was affected by malware on visiting 'TESO' site , beware people...

    ReplyDelete
    Replies
    1. thalaivar thottathu ethu thamilanai vilankavassurukku?

      naamathan usaaraa irukonum...

      Delete
    2. un system work aagalanna poi kodanaatula kuppara paduthuttu kusu vidurala oru thevidiya ava moothiratha vaangi kaluvu. pannada. neeyum unnoda karuthum.

      Delete
    3. திரும்பவும் வருகைக்கு நன்றி நண்பா........

      Delete