Saturday, September 1, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 01/09/2012



தொலைக்காட்சி…
சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய சினிமாக்களையெல்லாம் இனி இந்திய தொலைக்காட்சியில் ஒளீப்பரப்ப கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அடடா ரொம்ப நல்ல விஷயம்தான், இதைவிட மோசமான, ஆபாசமான, வன்முறைகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர்களையும், கேம்ஸ்களையும்  எல்லாம் எப்போ நிறுத்த சொல்ல போறாங்க?.

நீதானே என் பொன் வசந்தம்…
கவுதம் & இளையராஜா கூட்டனியில் வெளிவரப்போகும் படத்தோட பாடல்கள் வெளிவந்துருச்சு. இசையமைப்பாளர்களிடம் இருந்தும் பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் நல்ல ஹிட் ஆக்கூடிய பாடல்களை வாங்கி கொள்வதில் கவுதம் திறமையானவர்தான். நா.முத்துக்குமார் எழுதியிருக்கார், ஏன் தாமரை எழுதலன்னு நினைக்காம இருக்க முடியலை.

படம் போஸ்டர்களை பாக்கும் போது விண்ணைத்தாண்டி வருவாயா போலவே இருக்குமோன்னு நினைக்க வேண்டித்தான் இருக்கு.

இளையராஜா கலக்கியிருக்கார், எட்டு பாடல்கள் கொடுத்துருந்தாலும் ஏன் யுவன், கார்த்திக், ரம்யாவையே அதிகமா பாட வச்சுருக்காருன்னே தெரியலை. இமான் போன்றவர்களே வித்தியாசமான குரல்களை பயன்படுத்தும் போது மாஸ்ட்ரோ ஏன் தயங்குறார்? பாட்டு எல்லாம் கேக்குரதுக்கு நல்லா இருந்தாலும், எனக்கு பிடித்தமான வரிசை இதுதான்…அதுல முதல் நாலு பாடல்கள் சூப்பர்….

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…கார்த்திக்

முதல் முறை பார்த்த ஞாபகம்…சுனிதி சௌகான்….

வானம் மெல்ல கீழிறங்கி……இளையராஜா, பெலா ஷெண்டே

காற்றை கொஞ்சம் நிக்க சொன்னேன்….கார்த்திக்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது…யுவன், ரம்யா

சற்று முன்பு……ரம்யா..

பெண்கள் என்றால் பொய்யே பொய்தானா………யுவன்

புடிக்கலை மாமு…….சுராஜ் ஜெகன், கார்த்திக்

ஜெயா டிவி, எம்.எஸ்.விஸ்வநாதன் & ராம மூர்த்தி…
ரொம்ப அருமையான விழா தமிழக முதல்வரின் தலைமையில் ரஜினி, கமல் இளையராஜா போன்றவர்களின் பங்களிப்போடு, இளையராஜா ஓகே ஆனால் கமல் & ரஜினி கட்டாயமா கலந்துக்க வேண்டியிருக்கு யார் முதல்வரா வந்தாலும் ஏன்?. சரி எல்லாம் விளம்பரத்துக்காக இருக்கும். மக்களும் எம்.எஸ்.வி ராம்மூர்த்தி கலந்துக்கலான்னா கூட கவலைப்பட மாட்டாங்க, கமல் ரஜினி கலந்துக்கலைன்னா அவ்வளவுத்தான்….

கட்சிகாரர்களின் கூட்டம் இல்லாமல், குத்து டான்ஸ் இல்லாமல் நடந்த வரைக்கும் ரொம்ப சந்தோஷம். ரஜினியோட பேச்சும், அதற்கு ஜெயலலிதாவிடம் இருந்து பெரிசா பிரச்சனை வராமல் நாகரீகமா போயிக்கிட்டு இருப்பதும் அருமை. இடையில் தலிவர் எதாவது அறிக்கைவிட்டுடுவாரோன்னும் பயமாத்தான் இருக்கு.

மத்திய அரசு……..
தொடர்ந்து எட்டு நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. அய்யயோ இப்படி மக்கள் பணமெல்லாம் வீனா போகுதேன்னு ஒப்பாரி வைப்பவர்களை பற்றி கவலைப்படாம ஒரு முடிவு தெரியும் வரைக்கும் நடத்தவிட கூடாது. இவங்க தொடர்ந்து நடத்தி மாத்திரம் என்ன கிழிக்க போறாங்க? இல்லாட்டி மட்டும் நாடாளுமன்றம் நடைபெற ஆகும் செலவுக்கெல்லாம் என்ன பாலும் தேனுமா ஓடுது.

எல்லா முடிவுகளும் அன்னையின் வீட்டு கிச்சனில்தான் எடுக்கப்படுகிறது, நாடாளுமன்றம் நடந்தா மட்டும் அங்கயா முடிவு எடுக்க போறாங்க? நாடாளுமன்றம் முடக்கப்பட்டலாவது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு இருக்கும். ஏன்ன்னு ஒரு கேள்வி பிறக்கும். நாடாளுமன்றம் நடக்க ஆரம்பிச்சுட்டா பின்ன எல்லா பக்கிங்களுக்கும் அம்னீஷியா வந்துரும். 

மன்னுவும் ஊர் சுத்த கிளம்பிடுவார். எல்லாத்தையும் செஞ்சுட்டு பதில் சொல்லாம, நடவடிக்கை எடுத்து ஒப்பந்தங்களை ரத்து பன்னாம மன்னுமாதிரி மவுனமா இருக்கும் போது, மக்கள் பணம் கோடிக்கணக்கானதைப்பத்தி கவலை படாம இருக்கும் போது, இந்த ஒரு மாசம் நாடாளுமன்ற செலவு மாத்திரம் பெருசா என்ன? எதுக்கு நடத்த விடனும்? விட கூடாது….

கொடூர கொலை….
திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் முக்கிய பிரமுகருமான வெள்ளைச்சாமி எனும் காதர் பாட்ஷா கொடூர கொலை. திமுகவின் கட்சிக்காரர்கள் கொலைகளுக்கு மாத்திரம் முடிவே தெரிய மாட்டேங்குது. கடந்த கால நிகழ்வுகளை ஞாபகமாக மீட்டெடுத்து அறிக்கை விடும் தலைவரும் இதுக்கெல்லாம் ஒரு அறிக்கை கூட விட மாட்டேங்குறார். கிரானைட்டுக்கு வேற இன்னும் ஒரு அறிக்கையும் வரலை….

கருத்துக்கணிப்புகள்….
இவிங்க நல்லவயிங்கலா கெட்டவயிங்கலாத்தான் கேக்க தோனுது.
ஜெயலலிதா சிறந்த முதல்வர் என ஐம்பது சதவீத பேர் கருத்து சொல்லியிருக்காங்க. அப்ப மீதிப்பேர் சரியில்லைன்னு சொல்லியிருக்காங்க. கலிஞருக்கு முப்பத்திரெண்டு சதவீதம் பேர் ஆதரவு, ஸ்டாலினுக்கு பதினெட்டு. அப்போ தனி ஆட்களை விட்டுவிட்டு கட்சின்னு பாத்தா திமுகவுக்கு பாதிப்பேரும், அதிமுகவுக்கு பாதிப்பேரும் ஆதரவா?

காவிரி பிரச்சனைக்கு மத்திய அரசு ஒத்துழைக்காத வரைக்கும் முடிவு தெரிய போறதில்லை. பொதுவா பாத்தாக்க மின்வெட்டு பிரச்சனையை தவிர வேற பெரிய பிரச்சனை எதுவும் இருப்பதா தெரியலை. ஓரளவுக்கு ஊழல் இல்லாத நல்ல நிர்வாகம்தான் நடந்துக்கிட்டு இருக்கு போன ஆட்சி மாதிரி இல்லாமல்.

2ஜியில் திமுகவுக்கு தொடர்பு இருக்குமா எனும் கேள்விக்கு 52 சதவீத பேர் ஆமாமுன்னு தயக்கமே இல்லாம சொன்னாங்களாம். சரி விவரமாத்தான் இருக்காயிங்கன்னு பாத்தாக்க,

அனு உலைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இன்னும் இன்னும் வேனுமுன்னும் என்பது சதவீத தமிழர்கள் கேட்டுருக்காங்கலாம்…..வெளங்கிடும் ஆளுக்கு ஒரு செல்போனுக்கு பதிலா அனு உலை கொடுத்தாக்க தமிழர்களின் ஓட்டுக்களை அப்படியே அள்ளிக்கலாம் போலருக்கே…….., தாங்களே ஆப்புல தேடி போயி உக்கார நினைக்கிறாங்களேய்யா…

டெசோ மதுரையில்…
தமிழறிஞர், ஈழத்தமிழர்களின் விடிவெள்ளி, ஈழத்தின் வரலாற்றை கரைச்சு குடித்தவர் குஷ்பு அக்கா கலந்துக்கிட்ட கூட்டத்துல நிறைய திமுகவினர் கலந்துக்கலையாமுல்ல…மதுரைக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மட்டும்தான் சோதனைன்னு பாத்தா, இனி மதுரை திமுகவுக்கும் சோதனைத்தானா?

20 comments:

  1. நல்ல தொகுப்பு சார்... நன்றி...

    (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
    Caution : Restore/Backup your HTML, before editing :

    (1) Edit html Remove Indli Vote button script

    (2) Remove Indli Follow Widget

    தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
  2. paathu kaluvudi, aayaa soothu venthuda poguthu... ithellaam oru polappu....

    ReplyDelete
    Replies
    1. நல்லாத்தான் ஒத்து உதர தம்பி ஜெயா பேர எழுத்தரத்துகே இவ்வளவு பயமா உன் முஞ்சி பார்க்கும் பொதே தெரிவுதே உனக்கு "நக்குகுகுகு" ரொம்ப பெரிசுன்னு (பார்த்து உள்ள போய் மட்டிக்கபோவுது) அந்த அம்மாவே சொல்லிடுசி கவுன்சிலர்கள் எல்லாம் லஞ்சம் வங்கரங்க்னு இவரு புதுசா கண்டுபுடிசிட்டறு இந்த ஆட்சில ஊழல் இல்லையாம். ஒரு பழமொழி சொல்லுவாங்க "அற்பனுக்கும் வாழ்வு வந்தா அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பனாம்" அது போல உன்கிட்ட கணணி இருக்குதுன்னு என்ன வேனுமுனாலும் பதிவு என்ற பெயர்ல புல்லா போதை ஏத்திட்டு என்ன எழுதுறதுன்னு தெரியாம கண்ட கருமந்திரத்தை எழுதுற நீ ஒரு கண்ணு தெரியாத முண்டம் காது கேக்காத தண்டம் மொத்ததுல நீ தலையே இல்லாத முண்டம் உனக்கு ஒத்து உதுற ஜால்ரா பசங்க இருக்கிறவரைக்கும் உன்னைப்போல கண்ணாடி போட்ட முட்டா பசங்க இருக்கத்தான் செய்வாங்க. ஏன்டா கார்ல போற பெரிய பூ.......... தான் நீ இருப்பனு நான் நினைகிறேன் பஸ்ல போறவன்களோட கஷ்டம் உனக்கு தெரயுமடா. கூலி வேலை செய்றவங்க குழந்தைக்கு பால் வாங்க என்ன கஷ்டம் படுறாங்க தெரயுமடா. இலாத மின்சாரத்துக்கு இரண்டு மடங்க பில் கட்றது தெரியளையாட பட்ஜட்டே போடாத போது 4000 கோடிக்கு வரி போட்டது தெரியாதடா உன் பாஷையிலே சொன்னா "தூங்கரவங்களே எழுப்பலாம் அனால் உன்னை போல தூங்குவது போல நடிக்கிரவன எழுப்ப முடியாதுடா நல்ல நிர்வாகம்ன என்னனு தெரியுமாடா கண்ணாடி போட்ட கபோதியே. உன்னை சொல்லி குத்தம் இல்லடா உன்னை பெத்து இவ்வளவு பெரிசா வளர்த்து ஒரு மண்ணும் தெரியாமா இந்த மண்ணுக்கு பாரமாக வளர்த்து விட்டார்களே உங்க அப்பன் ஆத்தாளை சொல்லன்னும்ட. நீ ஓரக்கோடு எடுத்து தலை வாரும் பொதே தெரியும்ட நாக்குல ....... செய்றவன்னு. கொஞ்சம் நாகரிகமாக நான் வளர்ந்ததால இதோட மோசமா என்ன்னால திட்டமுடியல அதுக்காகவே நான் வருந்துறேன்

      Delete
    2. உங்க நாகரீகத்தை கண்டு நான் வியக்கேன்....,நல்லவங்களா இருக்கீங்க பின்ன ஏன்னே பேட் வேர்ட்ஸ்...

      Delete
    3. நீ போட்ட கேடு கெட்ட பதிவுக்கு என்னத்த சொல்லபோ நான் நல்லவன இருக்க தான் உன்னை இதோட விடுறேன் உன்னை நேர்ல பார்த்தேன்ன த்து..............?

      Delete
    4. கருத்து சொல்லும் போது ஏன்னே கோப படுறீங்க, உங்க கருத்துக்களை சொல்லுங்கன்னே..., கருத்துக்களில் முரன் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுதானேன்னே...

      கலைஞரை எனக்கும் மட்டும் இல்லன்னே அவரை திட்டும் எல்லாருக்கும் பிடிக்குமுன்னே, ஆனால் அவரு முன்ன மாதிரி இல்லாம இப்போல்லாம் தன் குடும்பத்துக்காக செய்யும் அதிகப்படியான சமரசங்கள்தான்னே பிடிக்க மாட்டேங்குது.

      Delete
    5. ஒரு பதிவு எழுதும் போது பலருக்கு அது நன்மையாய் இருக்க வேண்டும். குடும்பம் என்பது அவருக்கு இருக்குது நீ உன் பிள்ளைக்கு எதுவுமே செய்யமால் போய்விடுவாய? குடும்பமே இல்லாத ஒரு ஒரு ஒருவர் யார்யாரையோ கூட்டு சேர்த்துக்கொண்டு அந்த யார்யரோட பிள்ளைகள் எல்லாம் அரசையே நடத்தும் போது இது எவ்வளோவோ தேவலை தம்பி நடுநிலைய நீ இருந்தா நான் உன்னக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பேன் நாடு நிலையோடு உன் பதிவுகள் இருக்கட்டும்.

      Delete
    6. இப்ப கொஞ்சம் எழுதிக்கிட்டுத்தான்னே இருக்கேன், இன்னும் இன்னும் அடுத்தவங்களுக்கு பயன்படும் படியான பதிவுகள் எழுதுவோமுன்னே இன்னும் கொஞ்சம் எழுத்து பழகட்டுமுன்னே...

      கண்டிப்பா என் பிள்ளைக்கு அடுத்தவன் காசை அடிச்சு கொடுக்க மாட்டேன்னே, என் சொந்த உழைப்பில் நேர்மையான வழியில் சம்பாதிச்சத தான் கொடுப்பேன். அதே போல நேர்மையான வழியில் சம்பாதிக்கத்தான் கத்து கொடுப்பேன்...

      மத்தவங்க தப்பு பன்னுறாங்க, சரிதான் அவங்க வேண்டாமுன்னுத்தானேன்னே ஒவ்வொரு தடவையும் தலைவர் கையில் ஆட்சியை தருகிறார்கள் மக்கள்.

      தலைவர் பன்னுவதெல்லாம் சரிதான்னு எல்லா விஷயத்துலயும் நினைக்கிறீங்கலான்னே?

      மத்த தலைவர்களுக்கு கிடைக்காத உங்களை மாதிரியான தொண்டர்கள் பலம் கிடைச்சதுக்கு, தலைவர் எவ்வளவோ சாதிச்சுருக்கலாம்தானே?

      Delete
    7. அடுத்தவன் காசை கலைஞர் அவர்கள் திருடினருனு உன்னக்கு யாருடா சொன்னது அவரு பண்ணது தப்புணா இங்கே எல்லாரும் பண்ணுறதும் தப்புதான் உன்னிடம். கலைஞர் அவர்களின் ஆட்சியில் என்ன தப்பு கண்டு பிடித்தாய் நீ இப்போது தமிழில் பதிவு எழுதுகிறாய் என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம் என்பதை மறந்து விட்டதே.

      Delete
    8. சர்க்காரியா சொல்லியிருக்காரேன்னே.....

      பின்ன திகாருக்கு ஏன்னே போகனும், அந்த மத்திய அரசை வாங்கு வாங்குன்னு வாங்காம ஏன்னே பம்மனும்...

      Delete
    9. தூங்கரன்வன் நடிக்காதே

      Delete
  3. தல உண்மையா நீ தலதான் தருதல கிட்ட Y time வீன் ....

    ReplyDelete
    Replies
    1. உண்மையான தமிழன் நான், தறுதலை என்றால் உன்முகத்தை காட்டமா ஒரு சிலையோட முகத்தோட வர நீ என்ன என்னைவிட தருதையா தான் இருப்பே

      Delete
    2. நான் உண்மையான தமிழன் இல்லை , உண்மை தமிழன் என்றால் லட்சம் கோடி பணம் வைதிருகனும் நண்பா ....

      Delete
  4. என்ன சார் இப்படி‍ பயங் காட்டுறாரே இநத் அன்பானவர். மன உளைச்சல் இல்லாம, சளைக்காம நீங்களும் பதில் கொடுக்கறது‍ தேவையில்லை என்பது‍ என் கருத்து.
    பாபு,
    பாளையம்

    ReplyDelete